ஜிம்பாப்வேயில் ஏரியொன்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் மற்றும் காணாமல்போனவர்களின் எண்ணிக்கை தொடர்பில் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
