HomeTop newsநீதிபதிகளின் சம்பளத்திலிருந்து 'வரி' அறவிடுவது செல்லும்

நீதிபதிகளின் சம்பளத்திலிருந்து ‘வரி’ அறவிடுவது செல்லும்

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டத்தின்படி, நீதிபதிகளின் சம்பளத்திலிருந்து முன்பண தனிநபர் வருமான வரியை (APIT) அறவிடுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த தீர்மானத்திற்கு சவால் விடுத்து மேல் நீதிமன்ற நீதியரசர்கள் சங்கம், மாவட்ட நீதிபதிகள், நீதிவான்கள், மேலதிக நீதிவான்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நீதித்துறை உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் தொழிலாளர் தீர்ப்பாயத் தலைவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கம் ஆகியன மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

குறித்த மனுக்களை நிராகரித்த உயர் நீதிமன்றம், உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த தீர்மானம் சட்டப்பூர்வமானது எனவும் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular