HomeTop newsகேகாலையில் தொடர் வாகன விபத்து - பெண் ஒருவர் பலி

கேகாலையில் தொடர் வாகன விபத்து – பெண் ஒருவர் பலி

கேகாலை, மொலகொட, மங்களகம பகுதியில் தனியார் பேருந்து ஒன்று மற்றும் பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 7 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சாரதி பயிற்சிப் பாடசாலைக்குச் சொந்தமான பல வாகனங்களே இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular