மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி தொடர்பான விசேட மருத்துவ நிபுணராக பல நாடுகளில் பணியாற்றியுள்ள அவர், கண்டி மாவட்ட சமூக மருத்துவ நிபுணராகவும் பணியாற்றியுள்ளார்.
