சீரற்ற வானிலை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்த ஹட்டன் கல்வி வலயத்தின் அனைத்துப் பாடசாலைகளும் நாளை (06) மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் நாளை வழமை போல் இடம்பெறும் என ஹட்டன் வலயக் கல்வி காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.
சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் குறித்த வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
