Homeஉலகம்ஈரான், அமெரிக்காவுக்கிடையில் ஓமானில் சந்திப்பு!

ஈரான், அமெரிக்காவுக்கிடையில் ஓமானில் சந்திப்பு!

போர் பதற்றத்துக்கு மத்தியில் ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான இரு தரப்பு நேரடி சந்திப்பு நாளை வெள்ளிக்கிழமை ஓமானில் நடைபெறவுள்ளது.

பேசப்படும் விடயங்கள் மற்றும் சந்திப்பு நடைபெறும் இடம் என்பன தொடர்பில் எழுந்த சர்ச்சையால் இரு தரப்பு சந்திப்பு நடக்காது என ஊகம் வெளியிடப்பட்டிருந்த நிலையிலேயே சந்திப்பு தற்போது உறுதியாகியுள்ளது.

சந்திப்புக்குரிய ஏற்பாட்டை செய்த ஓமானுக்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி Abbas Araghchi நன்றி தெரிவித்துள்ளார்.

ஈரான்மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளலாம் என சர்வதேச உளவு அமைப்புகள் எச்சரித்திருந்தன.

இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமெரிக்க போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கை நோக்கி நகர்ந்தன.

மறுபுறத்தில் தமது நாடுமீது வைக்கப்பட்டால் அது மத்திய கிழக்கு போராக மாறும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஈரானின் ஏற்பட்டுள்ள போராட்டம் அந்நாட்டு அரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே நாளை இரு தரப்பு சந்திப்பு இடம்பெறவுள்ளது. இரு தரப்பிலும் உயர் மட்ட பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர்.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular