HomeTop newsஉள்நாட்டு சந்தையில் தங்க விலை மீண்டும் உயர்வு

உள்நாட்டு சந்தையில் தங்க விலை மீண்டும் உயர்வு

இன்று (30) காலை பதிவான விலையுடன் ஒப்பிடுகையில், உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று காலை 24 கரட் தங்கம் ஒரு பவுண் 379,000 ரூபாயாக விற்பனையான நிலையில், தற்போது 3,000 ரூபாய் அதிகரித்து 382,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 382,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 351,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,938 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular