கச்சத்தீவு மட்டுமல்லாமல், யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தமிழக முதல்வராக உள்ள விஜய்க்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
வட மாகாணத்தின் தீவுப் பகுதிகளில் மின்சார வசதி போதுமான அளவில் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார்.
ஜனாதிபதி கச்சத்தீவை வழங்க முடியாது என தெரிவித்திருந்தாலும், அதற்கு மாறாக யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்றும், அங்கு வாழும் மக்களை தமிழக மக்கள் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
