இன்று (27) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30) வரை, கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவாட்டுக்கும் (kW) அதிக திறன் கொண்ட சூரிய மின் தகடுகளை தற்காலிகமாக செயலிழக்கச் செய்ய தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் (National System Operator – NSO) நடவடிக்கை எடுத்துள்ளது.
மின்கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் 300 கிலோவாட்டுக்கும் அதிக திறன் கொண்ட கூரை சூரிய மின் உற்பத்தி அமைப்புகள் செயலிழக்கச் செய்யப்படவுள்ளன.
