Homeஉள்நாடுபோர் சில வாரங்களில் முடிவுக்கு வரும்: அமெரிக்கா நம்பிக்கை!

போர் சில வாரங்களில் முடிவுக்கு வரும்: அமெரிக்கா நம்பிக்கை!

ஈரான்மீது முன்னெடுக்கப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கைகள் சில வாரங்களில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் Marco Rubio நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள், ஆயுத உற்பத்திசாலைகள், இராணுவத் தளங்கள் என்பவற்றின்மீது வான்வழித் தாக்குதலை நடத்திவரும் அமெரிக்கா, தரைப்படையையும் களமிறங்க திட்டமிட்டுவருகின்றது.

தரைப்படையினரின் நேரடித் தாக்குதல் இன்றி இலக்குகளை எட்ட முடியும் என அமெரிக்கா கருதினாலும், அவசரத் தேவைகளுக்காக ஆயிரக்கணக்கான அமெரிக்க படையினர் மத்திய கிழக்கில் குவிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையிலேயே அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த போரானது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் மனிதாபிமான நெருக்கடியையும் உலகப் பொருளாதாரத்தில் பெரும் சரிவையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் ஏவுகணை ஆற்றலே அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு தற்போது பெரும் தலையிடியாக மாறியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular