Homeஉலகம்போர் நிறுத்த முயற்சிக்கு மத்தியில் விசேட படைப்பிரிவை மத்திய கிழக்கில் அமெரிக்கா களமிறக்குவது ஏன்?

போர் நிறுத்த முயற்சிக்கு மத்தியில் விசேட படைப்பிரிவை மத்திய கிழக்கில் அமெரிக்கா களமிறக்குவது ஏன்?

ஈரானுடன் சமரசப் பேச்சு நடக்கின்றது என டொனால்ட் ட்ரம்ப் கூறிவரும் நிலையில், அமெரிக்கா தனது வான் படையின் 82வது படைப்பரிவைச் சேர்ந்த சுமார் 1,000 வீரர்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப தயாராகிவருகின்றது.

மத்திய கிழக்கில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான கடற்படை வீரர்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய நகர்வு அமெரிக்காவின் ராணுவ இருப்பை மேலும் வலுப்படுத்துகிறது.

ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக ட்ரம்ப் கூறினாலும், ஈரான் தரப்பு அதனைத் தொடர்ந்து மறுத்து வருகிறது.

முக்கியமான நிலப்பரப்புகளைக் கைப்பற்றும் திறன் கொண்ட இந்த சிறப்புப் படைப்பிரிவு, அவசரகால நடவடிக்கைகளுக்காக எந்நேரமும் களமிறங்கத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பென்டகன் அதிகாரிகள் இது குறித்த ரகசிய விளக்கங்களை நாடாளுமன்றக் குழுவிடம் வழங்க உள்ளனர்.

போர்ச் சூழலைத் தணிக்க ஒருபுறம் தூதரக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், மறுபுறம் ராணுவ ரீதியாக அமெரிக்கா தனது தற்காப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular