Homeஉலகம்ஈரான் இரகசிய பேச்சுகளில் ஈடுபடவில்லை!

ஈரான் இரகசிய பேச்சுகளில் ஈடுபடவில்லை!

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் எவ்வித நேரடி அல்லது மறைமுகப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என்று பாகிஸ்தானுக்கான ஈரான் தூதுவர் Reza Amiri Moghadam இன்று (25) அறிவித்தார்.

ஈரானுடன் பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையிலேயே ஈரான் தூதவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போதைய போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவர நட்பு நாடுகள் சமரச முயற்சியில் ஈடுபட்டாலும், ஈரானிய அதிகாரிகள் அமெரிக்கத் தரப்புடன் நேரடியாகப் பேசவில்லை என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு மத்தியஸ்தம் வகிப்பதற்கு தயார் என பாகிஸ்தான் அறிவித்திருந்தது.

இந்நிலையிலேயே பாகிஸ்தானில் உள்ள ஈரான் தூதுவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதேவேளை சமரச பேச்சுக்குரிய 15 அம்ச திட்டத்தை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது என சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular