Homeஉள்நாடுபெலவத்தையிலிருந்து அரசாங்கத்தை இயக்குவது டில்வின் சில்வாவா?

பெலவத்தையிலிருந்து அரசாங்கத்தை இயக்குவது டில்வின் சில்வாவா?

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்குள் பதவிப் போட்டி எதுவும் இல்லை. கூட்டு பொறுப்புடனேயே செயல்பட்டுவருகின்றோம். நாளை பதவி விலகச்சொன்னால்கூட விலகிச்செல்லக்கூடிய தோழர்களே உள்ளனர். புதவியைவிட கடமைதான் முக்கியம்.”

இவ்வாறு ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

எமது அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்ள முடியாத தரப்பினரே, பிளவு பற்றி கதைகளைப் பரப்பி வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பெலவத்தையில் (ஜே.வி.பி. தலைமையகம்) நீங்கள் இயக்குவதாகக் கூறப்படுகின்றது.

நீங்கள்தான் உத்தியோகப்பூர்வமற்ற ஜனாதிபதி என்ற விமர்சனமும் எதிரணியால் முன்வைக்கப்படுகின்றதே…” என டில்வின் சில்வாவிடம் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு,

“நான் உத்தியோகப்பூர்வமற்ற ஜனாதிபதி அல்லன். நான் ஜே.வி.பியின் செயலாளர் மட்டுமே.

நான் எவருக்கும் அழுத்தம் பிரயோகிப்பது கிடையாது. அரசாங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பது இல்லை.

ஜே.வி.பி. மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பவற்றின் தலைமையகம் பெலவத்தையில்தான் உள்ளது.

ஆட்சி அமைப்பதற்கு முன்னரும் நாம் அங்கிருந்துதான் முடிவுகளை எடுப்போம். தற்போதும் அங்கிருந்து கலந்துரையாடுவோம்.

அமைச்சரவையில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் உரிய இடத்தில் எடுக்கப்படும். எமது கட்சி தலைமையகத்தில் கருத்தாடல் இடம்பெறும்.

பல யோசனைகள் வரும், அது பற்றி ஆராயப்பட்டு பெரும்பாலானோரின் தேர்வு ஏற்கப்படும்.

எனவே, பெலவத்தையில் கலந்துரையாடல் இடம்பெறும். ஆனால் பெலவத்தையில் இருந்து கொண்டு ஒருவர் இயக்குகின்றார் எனக் கூறப்படுவது தவறு.

ஏனைய கட்சிகளைப்போல தனிநபர் செல்வாக்கு செலுத்தும் கட்சி அல்ல எமது கட்சி. நாம் என்ற சிந்தனை அடிப்படையிலேயே செயல்படுகின்றோம். எம்மிடையே கூட்டு பொறுப்பு உள்ளது.

தனிநபர் ஆதிக்கம் செலுத்தும் கட்சிகளுக்கு எமது அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்வது கடினம்.” – என்றார் டில்வின் சில்வா.

https://www.youtube.com/watch?v=hxFjnM_Ro1Q

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular