Homeஉள்நாடுரூ. 50 ஆயிரம் கொடுப்பனவையும் 31 ஆம் திகதிக்குள் வழங்கி முடிக்க எதிர்பார்க்கின்றோம்!

ரூ. 50 ஆயிரம் கொடுப்பனவையும் 31 ஆம் திகதிக்குள் வழங்கி முடிக்க எதிர்பார்க்கின்றோம்!

பேரிடரால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தப்படுத்துவதற்குரிய 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு 90 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

“ மேற்படி கொடுப்பனவு சில மாவட்டங்களில் 99 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் வழங்கி முடிக்கப்படும்.

வீட்டு உபகரணம் வாங்குவதற்குரிய 50 ஆயிரம் கொடுப்பனவு, உலர் உணவு பொருட்களுக்கான கொடுப்பனவு, பாடசாலை மாணவர்களுக்குரிய கொடுப்பனவு என்பவற்றையும் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் வழங்கி முடிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.” எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular