ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது இன்று (14) சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரயில்வே திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால் குறித்த திணைக்கள இணையத்தளத்தின் ரயில்களின் நேர அட்டவணை தொடர்பான விபரங்களை அறியும் பகுதி செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த இணையத்தளத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
