Homeஉள்நாடு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமானில் மிக உயரிய விருது

 பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமானில் மிக உயரிய விருது

ஓமான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்த நாட்டின் மிக உயரிய, ‘ஆர்டர் ஆப் ஓமான்’ விருதை மன்னர் சுல்தான் ஹைதம் பின் தரிக் வழங்கி கௌரவித்தார்.

ஜோர்தான், எத்தியோப்பியா மற்றும் ஓமான் ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று முன்தினம் எத்தியோப்பியா சென்ற அவருக்கு, அந்நாட்டின் மிக உயரிய விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து நேற்று ஓமான் சென்ற பிரதமர் மோடிக்கு, அங்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் தலைநகர் மஸ்கட்டில் நடந்த விழாவில் அந்நாட்டின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் ஓமான், மன்னர் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கால் பிர தமர் மோடிக்கு வழங்கப்பட்டது
.
இது, பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 29வது சர்வதேச விருது.

இந்த விருதை இரண்டாம் எலிசபெத் ராணி, நெதர்லாந்தின் ராணி மேக்சிமா, ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ, தென்னாப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, ஜோர்டான் மன்னர் அப்துல்லா ஆகியோர் ஏற்கனவே பெற்றுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular