Homeஉள்நாடுசுதந்திரக் கட்சியில் இணைந்த விஜயதாசவுக்கு 4 முக்கிய பதவிகள்!

சுதந்திரக் கட்சியில் இணைந்த விஜயதாசவுக்கு 4 முக்கிய பதவிகள்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவராக முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபாலடி சில்வா அணியுடன் சமரசரம் ஏற்பட்டுள்ள நிலையிலேயே அவருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கட்சிக்கு எதிராக தொடுக்கப்பட்ட ஆறு வழக்குகளை விஜயதாச ராஜபக்ச மீளப்பெற்றுள்ளார்.

கொழும்பு மாவட்ட தலைவர் பதவிக்கு அப்பால் மஹரகம தொகுதி அமைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.கட்சியின் அரசியல் உயர்பீடத்துக்கும் உள்வாங்கப்பட்டுள்ளார்.

அடுத்த நிறைவேற்றுக்குழு கூட்டத்தின்போது அவருக்கு சிரேஸ்ட உப தலைவர் பதவி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை, சுதந்திரக் கட்சிக்கு செல்வது பற்றி விஜயதான ராஜபக்ச தனக்கு தெரியப்படுத்தினார் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தனது தலைமைப் பதவிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்ட பின்னர், பதவி விலகி அப்பதவியை விஜயதாச ராஜபக்சவுக்கு மைத்திரி வழங்கி இருந்தார்.

இதற்கு நிமல் சிறிபாலடி சில்வா தரப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular