Homeஉள்நாடுகுளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி: புசல்லாவையில் சோகம்!

குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி: புசல்லாவையில் சோகம்!

குளவிக்கொட்டுக்கு இலக்காகி வயோதிப பெண்ணொருவர் பலியாகியுள்ளார். புசல்லாவை, சோகம தோட்டம் நடுகணக்கு பகுதியிலேயே இன்று மாலை இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் புசல்லாவை, வகுவப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புசல்லாவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

” ஒரு குளவியே இவரை கொட்டியுள்ளது. எனவும், வலி தாங்காமல் ஓடிவரும்வேளையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்” என பிரதேச வாசியொருவர் தெரிவித்தார்.

உயிரிழந்த பெண்ணின் வயது 67 ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டார். பிரேத பரிசோதனை இன்னும் நடக்கவில்லை.

க.யோகா

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular