Homeஉள்நாடுதிகா விரைவில் ராஜினாமா! மாகாணசபைத் தேர்தலில் போட்டி?

திகா விரைவில் ராஜினாமா! மாகாணசபைத் தேர்தலில் போட்டி?

 

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவதற்கு திட்டமிட்டுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

தேர்தல் அறிவிப்பு வெளியான பின்பு அவர் எம்.பி. பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

தமது கட்சியை சார்ந்த ஒருவருக்கு எம்.பி. பதவியை வழங்கிவிட்டு, மாகாண தேர்தலில் மக்கள் ஆணையை பெறும் நோக்கிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

கட்சி பிரமுகர்களுடன் இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தி வருகின்றார் எனவும், விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular