Homeஉள்நாடுகாகிதத் தாள்களே கையளிப்பு: விளம்பரத்துக்காகவே நிகழ்வு!

காகிதத் தாள்களே கையளிப்பு: விளம்பரத்துக்காகவே நிகழ்வு!

 

இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் சமூகவலைத்தள பதிவு வருமாறு,

” இன்று வழங்கப்பட்ட இந்த ஆவணமானது வழக்கமாக பயனாளர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்படும், மேலும் வீடுகள் ஒப்படைக்கப்படும்போது ஒரு நிகழ்வு நடத்தப்படும். (அவை முடிந்ததும்)
இந்நிகழ்வானது “2000 வீடுகளை கையளிப்பது அல்ல!”, ஆனால் 2000 காகிதத் தாள்களை கையளிப்பதை உள்ளடக்கிய ஒரு விளம்பர நிகழ்வு மாத்திரமே.

இந்த காகித ஆவணம் வழங்கும் நிகழ்வுக்கு எந்த தேவைப்பாடுகளும் இல்லை.

கடந்த ஒரு வருடமாக மலையகத்தில் அல்லது மலையக சமூகத்திற்காக எந்த ஒரு வேலையும் செய்யப்படவில்லை என்ற உண்மையிலிருந்து பொதுமக்களை திசைதிருப்புவதற்கான இது ஒரு தந்திரோபாயம் மட்டுமே.

குறிப்பாக வேதனம் அதிகரிப்பு இல்லை, வீடுகள் கட்டப்படவில்லை, அபிவிருத்திகள் ஏதும் இடம்பெறவில்லை.”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular