HomeTop newsஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியதாக வெளியான செய்தி தவறு - ஜனாதிபதி ஊடகப் பிரிவு

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியதாக வெளியான செய்தி தவறு – ஜனாதிபதி ஊடகப் பிரிவு

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் யாரும் தங்கியிருக்கவில்லை என்றும், அச்செய்தி முற்றிலும் தவறானது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதிலும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் 3,089 வெளிநபர்கள் தங்கியிருந்ததாகப் செய்தி வெளியானது குறித்தே ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த விளக்கமளித்துள்ளது.

அத்துடன், குறித்த ஆண்டின் போது ஜனாதிபதி மாளிகைகளின் வளாகத்தில் உள்ள ஏனைய கட்டடங்களில் பாதுகாப்புப் படை அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அதிகாரபூர்வ தேவைகளுக்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கியிருந்ததாகச் சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, ஆனால் அந்த அதிகாரிகள் யாரும் ஜனாதிபதி மாளிகைகளுக்குள் தங்கியிருக்கவில்லை என்றும் அவ் அறிக்கையில் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular