Homeஉள்நாடுமுதல்வர் வேட்பாளராக களமிறங்குவேன்: அர்ச்சுனா திட்டவட்டம்!

முதல்வர் வேட்பாளராக களமிறங்குவேன்: அர்ச்சுனா திட்டவட்டம்!

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்று வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

“மாகாணசபைத் தேர்தலை நடத்தப்பட வேண்டும். ஆனால் அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லையென்பதால் அது நடக்குமா என்பது சந்தேகமே.” எனவும் அவர் கூறினார்.

“தேர்தல் நடத்தப்படும்பட்சத்தில் வடக்கு மாகாணசபை முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவேன். மக்கள் விரும்பினால் என்னை ஏற்பார்கள், இல்லையேல் நிராகரிப்பார்கள்.

மக்கள் ஆணை வழங்கினால் சில தீர்வு திட்டங்கள் உள்ளன. நிராகரித்தால் எனது சொந்த தொழிலை நான் முன்னெடுப்பேன்.” என அர்ச்சுனா எம்.பி. மேலும் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular