தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) முன்னாள் தலைவர் ரேணுகா பெரேராவை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கைது செய்துள்ளது.
பேருந்துகளுக்கான வழித்தட அனுமதிப்பத்திரங்களை சட்டவிரோதமான முறையில் வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே ரேணுகா பெரேரா கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
