பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றம் இன்று (10) தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்த பொதுமன்னிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது எனத் தீர்மானித்துள்ளது.
இதனையடுத்து, ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
