Homeவிளையாட்டுமுதல் நாளிலேயே மிரட்டிய இந்தியா

முதல் நாளிலேயே மிரட்டிய இந்தியா

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 288 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையை எட்டியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து இந்த சிறப்பான ஓட்ட எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது.

இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தேவ்தத் படிக்கல் அபாரமாக துடுப்பெடுத்தாடி தனது அறிமுக டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.

இலங்கை பந்துவீச்சாளர்களின் சவால்களை மிகவும் திறம்பட எதிர்கொண்ட அவர், 178 பந்துகளுக்கு முகங்கொடுத்து 12 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு ஆறு ஓட்டம் அடங்கலாக 131 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று களத்தில் உள்ளார்.

துடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களைச் சேர்த்து வந்த மற்றொரு மூத்த வீரர் கே.எல். ராகுல், திடீரென ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக பாதியிலேயே ஆட்டமிழக்காமல் ஓய்வு பெற்று (Retired Hurt) மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இதற்கிடையில், சுப்மன் கில் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததுடன், ரிஷப் பண்ட் 27 ஓட்டங்களுடன் களத்தில் தொடர்கிறார்.

இப்போட்டியில் இலங்கை அணி சார்பில் அறிமுகமான இளம் பந்துவீச்சாளர் கேஷர நுவந்தவிற்கு இன்றைய நாள் கடினமானதாக அமைந்தது.

அவர் எந்தவொரு விக்கெட்டையும் வீழ்த்தாமல் 98 ஓட்டங்களை வாரி வழங்கியதுடன், ஏனைய இலங்கை பந்துவீச்சாளர்களாலும் இந்திய துடுப்பாட்டக்காரர்களுக்குப் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியவில்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular