HomeTop newsபல்லன்சேன சிறை கைதிகள் சற்றுமுன்னர் அதன் வாயிற்கதவை முற்றுகையிட்டுள்ளதாக தகவல்

பல்லன்சேன சிறை கைதிகள் சற்றுமுன்னர் அதன் வாயிற்கதவை முற்றுகையிட்டுள்ளதாக தகவல்

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சற்றுமுன்னர் அதன் வாயிற்கதவை முற்றுகையிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

குறித்த சிறைச்சாலையின் இறுதி வாயிற்கதவுக்கு அருகில் பெருந்திரளான கைதிகள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

முன்னதாக பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலர் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் அங்கு தொடர்ந்தும் பதற்ற நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் அதிகளவான பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சூழ்நிலையைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகள் சிலர் பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular