இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள மாடி வீட்டுத் தொகுதி ஒன்றில் இன்று (19) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த மாடி வீட்டுத் தொகுதியின் இரண்டாவது மாடியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெஹிவளை தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தெஹிவளை தீயணைப்புப் பிரிவின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதாகவும், தற்போது தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
