HomeTop newsபெண் உடலியல் சிகிச்சை நிபுணர் கொலை வழக்கு - பிரதான சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலை

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் கொலை வழக்கு – பிரதான சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலை

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த இருவர் உட்பட நால்வர் இன்று (09) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நுவரெலியா பகுதியில் வைத்து பெண் உடலியல் நிபுணரை கொலை செய்த பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய குண்டசாலை பிரதேச சபையில் பணியாற்றும் சாரதி, மெனிக்ஹின்ன பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆகியோரே இவ்வாறு இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

நுவரெலியா பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்தச் சந்தேகநபர்கள், நுவரெலியா நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் (26) ஆம் திகதி நுவரெலியா நீதவான் புத்திகா ஹர்ஷனி தர்மதாஸவிடம் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபர்களை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular