முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவை, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கிய பின்னர், அவரை அதிகாரிகள் கைது செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
