உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நேருக்கு நேர் சந்திப்பு நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். ஐரோப்பாவில் நடைபெறும் போருக்கு தீர்வு காண நேரடி பேச்சுவார்த்தையே வழி என அவர் பகிரங்க கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
பேச்சுவார்த்தை காலத்தில் முழுமையான போர்நிறுத்தம் வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். ஆனால் இந்த சந்திப்பு முன்மொழிவை புடின் நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இரு தலைவர்களும் சந்தித்தால் அது நல்ல முன்னேற்றம் என தெரிவித்துள்ளார். கிரெம்ளின், கடிதம் கிடைத்ததை உறுதிப்படுத்தி புடினுக்கு விளக்கமளிக்கப்படும் என கூறியுள்ளது.
