ஹங்கம, களமெட்டிய கடலில் நீராடச் சென்றபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மூன்று பாடசாலை மாணவர்களின் சடலங்களும் இன்று (31) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துயரச் சம்பவத்தில் 12, 17 மற்றும் 18 வயதுடைய மூன்று பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்கள் இன்று காலை தேடுதல் நடவடிக்கையின் போது மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த மாணவர்கள் நேற்று (30) மாலை களமெட்டிய கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட கடல் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.
காணாமல் போன மாணவர்களைத் தேடும் பணியில் பொலிஸார், கடற்படை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து ஈடுபட்டிருந்த நிலையில், இன்று காலை அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த மூவரும் ஹுங்கம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த துயரச் சம்பவம் ஹுங்கம பிரதேச மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், மாணவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை
