இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையில் முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு நேற்று (04) இலங்கையை வந்தடைந்தார்.
அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ அரச விழா இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன் பின்னணியில், இரு நாடுகளுக்கும் இடையில் மொத்தம் 7 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
