Homeஉலகம்ஈரானில் உள்ள தீவை கைப்பற்ற முயற்சி: உளவுப் பிரிவு எச்சரிக்கை!

ஈரானில் உள்ள தீவை கைப்பற்ற முயற்சி: உளவுப் பிரிவு எச்சரிக்கை!

ஈரான் நாட்டுக்குச் சொந்தமான தீவு ஒன்றைப் எதிரி நாடுகள் ஆக்கிரமிக்கத் திட்டமிடுவதாகக் கிடைத்துள்ள உளவுத்துறைத் தகவல்கள் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.

இதற்கு உடந்தையாக இருக்கும் அண்டை நாடுகளின் முக்கியக் உட்கட்டமைப்புகள் மீது கடுமையானத் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் நாடாளுமன்றச் சபாநாயகர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

அதே நேரத்தில், ஈரான் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் முன்னெப்போதும் இல்லாத அடக்குமுறையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அமெரிக்க வெள்ளை மாளிகை மிரட்டல் விடுத்துள்ளது.

இந்தப் போர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அமெரிக்கா ஆயிரக்கணக்கான வான்வழித் தாக்குதல் படைவீரர்களையும் போர்க்கப்பல்களையும் வளைகுடாப் பகுதிக்கு விரைவாக அனுப்பி வருகிறது.

ஒருபுறம் பேச்சுவார்த்தை நடப்பதாக அமெரிக்கா கூறினாலும், மறுபுறம் இரு நாடுகளுக்கும் இடையே நேரடி ராணுவ மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதை தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular