Homeஉள்நாடு'போர்ச் சூழல்' - இலங்கை, இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் ஆராய்வு!

‘போர்ச் சூழல்’ – இலங்கை, இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் ஆராய்வு!

மேற்காசிய மோதலின் பின்விளைவுகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், வெளிவிவகார அமைச்சர் விஜித `ஹேரத்துடன் கலந்துரையாடியுள்ளார்.

தொலைபேசி மூலம் நடத்தப்பட்ட இந்த உரையாடல் குறித்து, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் ஒரு நல்ல உரையாடல் நடைபெற்றது.

மேற்காசிய மோதலின் பின்விளைவுகள் குறித்து கலந்துரையாடினோம்.

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை மற்றும் மகாசாகர் தொலைநோக்குப் பார்வை முயற்சியில் இந்தியா உறுதியுடன் இருக்கிறது“ என்று அந்தப் பதிவில் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular