Homeஉலகம்ஆப்கானிஸ்தான் வைத்தியசாலைமீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: 400 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் வைத்தியசாலைமீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: 400 பேர் பலி!

ஆப்கானிஸ்தான், காபூலில் உள்ள வைத்தியசாலைமீது hகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்ததாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் சுமார் 250 பேர் காயமடைந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவே (16) இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா தெரிவித்துள்ளார்.

எனினும், மக்கள் அதிகம் இருக்கும் இடத்தில் தாங்கள் தாக்குதல் மேற்கொள்ளவில்லை என பாகிஸ்தான் மறுத்துள்ளது.

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் வைத்தியசாலை போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிற சூழலில், அண்மைய காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக இருதரப்புக்கும் இடையே போர் மூண்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular