Homeஉள்நாடுலுணுகலை நகர் அன்னை லூர்து ஆலய வருடாந்த திருவிழா

லுணுகலை நகர் அன்னை லூர்து ஆலய வருடாந்த திருவிழா

லுணுகலை நகர் – பதுளை மறை மாவட்டத்திற்குட்பட்ட லுணுகலை பிரதேசத்தில் அமைந்துள்ள அன்னை லூர்து ஆலயத்தின் வருடாந்த திருவிழா மிகுந்த ஆன்மீக உற்சாகத்துடன் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் லுணுகலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பெருமளவிலான மறைமாவட்ட விசுவாசிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பாரம்பரிய மாலை வேண்டுதல் (Vespers) ஆராதனையை பண்டாரவளை புனித அந்தோணியார் திருத்தலம் வண. அருட்தந்தை ஜகத் பொன்சேகா தலைமையேற்று நடத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற கர்மேலைத் திருச்சபை குருமார்களின் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி இனிதே நிறைவேற்றப்பட்டது.

பின்னர் லூர்து அன்னையின் திருஉருவச் சிலை ஏந்திய பவனி லுணுகலை நகரில் நடைபெற்றதுடன், இறுதியில் விசேட ஆசீர்வாதத்துடன் திருவிழா இனிதே நிறைவடைந்தது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular