Homeஉள்நாடுகம்பளை, நாவலப்பிட்டிய வீதியில் கோர விபத்து: 3 வயது சிறுமி பலி!

கம்பளை, நாவலப்பிட்டிய வீதியில் கோர விபத்து: 3 வயது சிறுமி பலி!

கம்பளை, நாவலப்பிட்டி பிரதான வீதியின் நாகொல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று வயது சிறுமியொருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று மாலைவேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

கம்பளை நோக்கிப் பயணித்த காரொன்று, பஸ்ஸை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் மற்றும் அவரது இரு படுகாயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி 3 வயதுடைய பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

க.யோகா

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular