Homeஉள்நாடு46 நாட்களுக்குள் நான்கு லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை!

46 நாட்களுக்குள் நான்கு லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கைக்கு 2026 ஜனவரி 01 முதல் பெப்ரவரி 15 வரையான காலப்பகுதிக்குள் 4 லட்சத்து 36 ஆயிரத்து 666 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 78 ஆயிரத்து 157 பேரும், பிரிட்டனில் இருந்து 47 ஆயிரத்து 347 பேரும், ரஷ்யாவில் இருந்து 39 ஆயிரத்து 741 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

ஜேர்மனியில் இருந்து 30 ஆயிரத்து 85 பேரும், சீனாவில் இருந்து 25 ஆயிரத்து 563 பேரும், பிரான்ஸில் இருந்து 23 ஆயிரத்து 124 பேரும் மேற்படி காலப்பகுதிக்குள் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

மேலும் ஆஸ்திரேலியாவில் இருந்து 16 ஆயிரத்து 672 பேரும், கனடாவில் இருந்து 8 ஆயிரத்து 77 பேரும் வருகை தந்துள்ளனர்.

இலங்கையின் பொருளாதாரத்துக்கு சுற்றுலாத்துறை பெரும் பங்களிப்பு வழங்கிவருகின்றது.

கடந்த வருடம் 23 லட்சத்து 62 ஆயிரத்து 521 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular