Homeஉள்நாடுரணில், சஜித் சங்கமித்ததும் வலுவான கூட்டணி மலரும்!

ரணில், சஜித் சங்கமித்ததும் வலுவான கூட்டணி மலரும்!

“ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைந்த பின்னர் வலுவானதொரு கூட்டு எதிரணியைக் கட்டியெழுப்ப முடியும்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது. அது சாதகமான திசையை நோக்கி பயணிக்கின்றது. சிறந்த பிரதிபலன் கிடைக்கும் என நம்புகின்றோம்.

கிராம மட்டங்களில் பிளவுபட்டிருக்கும் கட்சி ஆதரவாளர்கள் ஒன்றிணைந்துள்ளனர். தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும் என கோரிவருகின்றனர்.

எனவே, ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்து அடுத்து வரும் தேர்தல்களை எதிர்கொள்வதற்குரிய சூழ்நிலை உள்ளது.

நாம் இரு தரப்பும் இணைந்த பின்னர் வலுவானதொரு பொது எதிரணியைக் கட்டியெழுப்ப முடியும்.” – என்றார் ருவான் விஜேவர்தன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular