Homeஉள்நாடுடி20 உலகக்கிண்ண தொடர் 7 ஆம் திகதி ஆரம்பம்: இலங்கையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு!

டி20 உலகக்கிண்ண தொடர் 7 ஆம் திகதி ஆரம்பம்: இலங்கையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு!

“ஐ.சி.சி. டி20 உலகக்கிண்ண தொடரை முன்னிட்டு இலங்கையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது டி20 உலகக்கிண்ண தொடருக்கான பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் தொடர்பில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு,

“ ஐ.சி.சி. டி20 உலகக்கிண்ண தொடர் இலங்கை மற்றும் இந்தியாவின் இணை அனுசரணையில் பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 ஆம் திகதிவரை நடைபெறுகின்றது.

இலங்கையில் 20 போட்டிகளை நடத்தவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை வந்துள்ள அனைத்து அணிகளுக்கும் நன்றிகள். அவர்களுக்குரிய பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்படும்.” -என்றார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular