Homeஉள்நாடுமலையக மக்களுக்கான சம்பள உயர்வை எதிர்க்கவில்லை: காணி உரிமையும் வழங்குக!

மலையக மக்களுக்கான சம்பள உயர்வை எதிர்க்கவில்லை: காணி உரிமையும் வழங்குக!

“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறு தோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ மலையக மக்களுக்கு ஆயிரத்து 750 ரூபா வழங்குவதற்கு நாம் எதிர்ப்பு இல்லை. எமது உறுப்பினர்களும் எதிர்க்கவில்லை. இதனை பொறுப்புடனேயே கூறுகின்றேன்.

ஆயிரத்து 750 ரூபாவுடன் நின்றுவிடாது, தரிசு நிலங்களையும் அவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். அம்மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆயிரத்து 750 ரூபா வழங்குவது நல்ல விடயம். அதேபோல காணியும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டம்.” – என்றார் சஜித் பிரேமதாச.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular