Homeஉலகம்இது சுதந்திரத்துக்கான நேரம்: வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் அறிவிப்பு!

இது சுதந்திரத்துக்கான நேரம்: வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் அறிவிப்பு!

வெனிசுலாமீதான அமெரிக்காவின் அடாவடி நடவடிக்கையால் சர்வதேச அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இது சுதந்திரத்திற்கான நேரம் எனக் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதிநிக்கோலஸ் மதுரோ, வெனிசுலா மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரமான குற்றங்களுக்கு சர்வதேச நீதியை எதிர்கொள்வார்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அவர் மறுத்ததால் அமெரிக்கா அரசு சட்டத்தை அமுல்படுத்துவதற்கான தனது வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளது.

நமது நாட்டில் இறையாண்மை கொண்ட அரசு ஆட்சி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.நாங்கள் ஒழுங்கைக் கொண்டுவரப் போகிறோம்.

அரசியல் கைதிகளை விடுவிப்போம். ஒரு விதிவிலக்கான நாட்டைக் கட்டியெழுப்புவோம், எங்கள் குழந்தைகளை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவோம். நாங்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம், எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து இருக்கிறோம்.

நாம் அனைவரும் விழிப்புடனும் இருப்போம். வெனிசுலா சுதந்திரமாகிவிடும்.” – எனவும் வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் அறிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular