Homeஉள்நாடுஜனநாயக வழியிலேயே நாமல் அரியணையேறுவார்: மொட்டு கட்சி அறிவிப்பு

ஜனநாயக வழியிலேயே நாமல் அரியணையேறுவார்: மொட்டு கட்சி அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வீட்டுக்கு அனுப்படும். மாகாணசபைத் தேர்தலில் அதற்குரிய ஆரம்ப புள்ளி வைக்கப்படும். ஜனநாயக வழியில் நாட்டை பொறுப்பேற்பதற்கு நாமல் ராஜபக்ச தயாராகவே இருக்கின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே முன்னாள் இராஜாங்க அமைச்சர் சானக வக்கும்புர மேற்கண்டவாறு அறிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலுவடைந்துவருகின்றது. முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்தி தமது பலத்தை காட்டுமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம்.

மாகாணசபைத் தேர்தல் உட்பட அடுத்து நடக்கும் தேர்தல்களில் நாமல் ராஜபக்ச தலைமையில் மொட்டு கட்சி வெற்றிநடைபோடும்.
தேசிய மக்கள் சக்தியை வீட்டுக்கு அனுப்புவதற்குரிய அரசியல் தலைமைத்துவத்தை நாம் வழங்குவோம். கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கம் வீட்டுக்கு அனுப்படும்.

ஜனநாயக வழியிலேயே ஆட்சியை பிடிப்போம். சதி நடவடிக்கையில் ஈடுபடமாட்டோம். ஆட்சி அதிகாரத்தை பொறுப்பேற்பதற்கு நாமல் ராஜபக்ச தயாராகவே உள்ளார். மக்களுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வார்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular