Homeஉலகம்பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டம்!

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டம்!

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டம்!

ஆஸ்திரேலியாவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

சிட்னி,போண்டி கடற்கரையில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

இதனால் அச்சம், துயரத்துக்கு மத்தியிலேயே சிட்னி வாசிகள் புத்தாண்டை வரவேற்றனர்.

புத்தாண்டு பிறக்கும்வேளை சிட்னியின் புகழ்பெற்ற துறைமுகப் பாலம் வெண்மையாக மின்னியது.
பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

ஆஸ்திரேலியா முழுவதும் புத்தாண்டு நிகழ்வுகள் பொலிஸ் பிரசன்னத்திற்கு மத்தியில் நடந்தன. குறிப்பாக சிட்னியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது புத்தாண்டு செய்தியில் இந்த நடவடிக்கைகள் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவே என குறிப்பிட்டார்.

உலக மக்கள் அனைவரும் 2026 புத்தாண்டை வரவேற்க முழு உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.

உலகம் முழுவதும் ஒரே திகதி முறை பயன்படுத்தப்பட்டாலும், புவியின் சுழற்சி காரணமாக உலக நாடுகளின் காலநிலை மற்றும் அங்குள்ள நேர முறை என்பது ஒவ்வொரு நாட்டின் இருப்பிடத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.

அந்த வகையில் உலகிலேயே முதல் நாடாக 2026ஐ வரவேற்றது கிரிபாட்டி தீவு.

அதைத் தொடர்ந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் அடுத்த சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular