Homeஉலகம்ஜப்பானில் கத்திக்குத்து தாக்குதல்: 15 பேர் காயம்!

ஜப்பானில் கத்திக்குத்து தாக்குதல்: 15 பேர் காயம்!

ஜப்பானிலுள்ள தொழிற்சாலையொன்றில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிஷிமா நகரம் உள்ளது.

இந்நகரத்தில் வாகன டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தத் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த ஊழியர் நேற்று மாலை தொழிற்சாலையில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டார்.

அங்கு வேலை செய்துகொண்டிருந்த சக ஊழியர்களை கத்தியால் சரமாரியாக குத்தினார். இந்த தாக்குதலில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர். தாக்குதல் நடத்திய ஊழியரை கைதுசெய்த பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular