Homeஉள்நாடுகொழும்பில் போட்டியிட தயாராகிறாரா அர்ச்சுனா?

கொழும்பில் போட்டியிட தயாராகிறாரா அர்ச்சுனா?

கொழும்பில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. வடக்கு மக்களை என்னைவிடமாட்டார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்தார்.

கொழும்பு கோட்டை பொலிஸாரால் இன்று முற்பகல் அர்ச்சுனா எம்.பி. கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் பிணை வழங்கப்பட்டது.

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார். இதன்போது கொழும்பில் களமிறங்குவீர்களா என கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அர்ச்சுனா எம்.பி. கூறியவை வருமாறு,

“ கொழும்பு போட்டியிடுமாறுதான் எதிர்க்கட்சி தலைவரும் என்னிடம் கோரினார்.

எனினும், வடக்கு மக்களை என்னைவிட மாட்டார்கள். என்னை கொழும்புக்கு வரமாட்டார்கள்.

அவ்வாறு வந்தாலும் வடக்கில் கௌசல்யாவை களமிறக்கிவிட்டுதான் இங்கு வருவேன்.” என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular