Homeஉள்நாடுமுக்கிய துறைகளுக்கு ஆதரவளிப்பதாக இந்தியா உறுதி!

முக்கிய துறைகளுக்கு ஆதரவளிப்பதாக இந்தியா உறுதி!

முக்கிய துறைகளுக்கு ஆதரவளிப்பதாக இந்தியா உறுதி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின், சிறப்புப் பிரதிநிதியாக இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசுரியடவுன் பேச்சு நடத்தினார்.

குறித்த சந்திப்பு அலரிமாளிகையில் இன்று நடைபெற்றது.

இலங்கை முகங்கொடுத்த இயற்கை அனர்த்தத்தின் பின்னரான மீள்நிர்மாணப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து இச்சந்திப்பின்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

புகையிரதப் பாதைகள் மற்றும் பாலங்களைப் புனரமைத்தல், விவசாயத் துறையைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட முக்கியமான துறைகளுக்கு ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமரிடம் உறுதியளித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular