Homeஉலகம்நேட்டோவில் இணையும் திட்டத்தை கைவிடுகிறது உக்ரைன்!

நேட்டோவில் இணையும் திட்டத்தை கைவிடுகிறது உக்ரைன்!

நேட்டோ அமைப்பில் இணையும் திட்டத்தைகைவிட தயாரா இருப்பதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

இதனால் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான போர் முடிவுக்கு வரும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ரஷ்யா -உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

இதற்காக ரஷ்ய ஜனாதிபதி புதின், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோருடன் பேச்சு நடத்தினார்.

மேலும் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 28 அம்ச சமாதான திட்ட முன்மொழிவு ஒன்றை டிரம்ப் வெளியிட்டார்.
இந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ரஷ்யா, உக்ரைனுடன் அமெரிக்கா பேச்சு நடத்தி வருகிறது. எனினும், எந்த உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில், நேட்டோ கூட்டமைப்பில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விலக்கிக் கொள்ள தயாராக இருப்பதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த கலந்துரையாடலின்போது ஜெலென்ஸ்கி இதனை தெரிவித்தார்.

அதே நேரம் எந்த ஒரு நிலப் பகுதியை ரஷியாவுக்கு தர முடியாது என்றும், தங்களது பாதுகாப்புக்கு மேற்கித்திய நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுனார்.

ஜெலென்ஸ்கியின் இந்த திடீர் முடிவால் ரஷியா – உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular