Homeஉள்நாடுஎன்.பி.பி. ஆட்சியில் வெளிநாட்டு உதவிகள் முறைகேடாக பயன்படுத்தப்படாது: தேரர் நம்பிக்கை

என்.பி.பி. ஆட்சியில் வெளிநாட்டு உதவிகள் முறைகேடாக பயன்படுத்தப்படாது: தேரர் நம்பிக்கை

இலங்கைக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச உதவிகள் தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் முறைகேடாகப் பயன்படுத்தப்படமாட்டாது என்ற நம்பிக்கை உள்ளது என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

“ சுனாமி அனர்த்தத்தின்போதும் எமக்கு வெளிநாட்டு உதவிகள் கிடைக்கப்பெற்றன. எனினும், அவை மோசடியாகப் பயன்படுத்தப்பட்டன. அரசில்வாதிகள் முறைகேடாக நடந்துகொன்றனர். குறுக்கு வழியில் செயற்பாடுகள் இடம்பெற்றன.

கொரோனா நெருக்கடி காலகட்டத்திலும் மோசடிகள் இடம்பெற்றன. ஊசி விவகாரத்தில்கூட அமைச்சர் மோசடியில் ஈடுபட்டுள்ளார். தமது சொத்துகளை பெருக்கிக்கொண்டுள்ளார்.

கடந்த காலங்களில் இப்படியான கசப்பான அனுபவங்களே எமக்கு உள்ளன. எனினும், இந்த ஆட்சியின்கீழ் வெளிநாட்டு உதவிகள் குறுக்கு வழியில் பயன்படுத்தப்படமாட்டாது என நம்புகின்றோம்.” – எனவும் சோபித தேரர் குறிப்பிட்டார்..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular