Homeஉள்நாடுஇலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது தமிழகம்!

இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது தமிழகம்!

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது.

இதற்;கமைய 950 டொன் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களுடன்கூடிய கப்பல் சென்னை துறைமுகத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குறித்த கப்பல் இன்று காலை வழியனுப்பி வைக்கப்பட்டது.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரதின் ஆலோசனையின் படி, சென்னைதூதுவராக உள்ள டாக்டர் கணேசநாதன் கேதீஸ்வரன் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இன்று (06) காலை இந்த நிவாரணக் கொடையினை முதல்வர் ஸ்டாலின், உத்தியோகபூர்வமாக வைத்தியர் கணேசிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசின் அதிகாரிகளும், சென்னை இலங்கை துணைதூதரக அதிகாரிகளும் பங்கேற்றனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular